News January 8, 2026

குமரி: மூதாட்டியிடம் 5 பவுன் செயின் அபேஸ்!

image

வேங்கோடு குஞ்சாக்கோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் மனைவி ஞான செல்வம். இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஞான செல்வத்தின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார். இச்சம்பவம் குறித்து ஞான செல்வம் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 26, 2026

குமரி: திமுக நிர்வாகி & குடும்பத்தினர் கைது

image

குமரி, கருங்கல் பகுதியில் உள்ள ஷார்லின் சேம் கவரிங் கடையில் 4 பெண்கள் மற்றும் 1 ஆண், கடை ஊழியரின் கவனத்தை திருப்பி ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கமுலாம் பூசிய நகைகளை திருடி சென்றனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தி.மு.க. பேரூராட்சி துணைத்தலைவி பால்தங்கம், அவரது குடும்பத்தினரையும் கைது செய்து, நகைகளை மீட்டனர். இதில் ஒரு பெண் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 26, 2026

குமரி: வங்கி வேலை..ரூ. 48,000 சம்பளம்

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 26, 2026

குமரி: அரசு பேருந்து ஏறியதில் ஒருவர் பலி

image

நாகர்கோவிலில் அருகே கட்டையன் விளையை சேர்ந்தவர் அசாரி (65). இவர் கட்டையன் விளையில் ரோட்டை கடக்கும் போது அந்த வழியாகச் சென்ற பைக் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அசாரி கீழே விழுந்த நிலையில் அந்த வழியாகச் சென்ற அரசு பஸ் அவர் மீது ஏறியதில் படுகாயமடைந்த அசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!