News January 8, 2026

அரியலூர்: பொங்கல் விழா குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழகத்தில் பொங்கல் திருநாள் ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும் மற்றும் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் பொங்கல் திருவிழாவானது “சமத்துவ சுகாதார பொங்கல் விழா” ஜன.14 அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 31, 2026

அரியலூர்: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<>இங்கே கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

அரியலூர்: கோயில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு தூபாபுரம் கிராமத்தில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் பொருட்கள் திருடப்பட்டதை தொடர்ந்து மீன்சுருட்டி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். விசாரணையில், தூபாபுரம் மேலத்தெருவை சேர்ந்த ராஜா (54) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து மீன்சுருட்டி போலீசார் அவரை கைது செய்து பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

அரியலூர் விவசாயிகளுக்கு அட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்காக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தனியார் உர விற்பனை நிலையங்களில் 1925 மெட்ரிக் டன் யூரியா, 1088 மெட்ரிக் டன் டிஏபி, 419 மெட்ரிக் டன் பொட்டாஷ், 2292 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கபட்டு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 45 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!