News January 8, 2026

கள்ளக்குறிச்சியில் பூட்டிய வீடுதான் TARGET – உஷார்!

image

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகேயுள்ள டி.கீரனூரைச் சேர்ந்தவர் ராணி (55). இவா் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரு சென்றுள்ளார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.1.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு!

image

கள்ளக்குறிச்சி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

News January 31, 2026

FLASH: சின்னசேலத்தில் பயங்கர விபத்து!

image

சேலம் மாவட்டம் புளியங்குறிச்சியைச் சேர்ந்த லோகநாதன், சின்னசேலம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார். இன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, வாசுதேவனூர் தனியார் கல்லூரி அருகே எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதினார். இந்த கோர விபத்தில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!