News January 8, 2026
ஏப்ரல் 1-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகை 2 கட்டங்களாக நடைபெறும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல் 1 தேதி தொடங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 30 நாள்கள் நடைபெற எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2-ம் கட்ட பணிகள் 2027 பிப்ரவரியில் தொடங்க உள்ளது. இதற்காக ₹11,718 கோடி பட்ஜெட்டை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
Similar News
News January 30, 2026
தைரியம் இருந்தால் புடின் உக்ரைன் வரலாம்: ஜெலன்ஸ்கி

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்யா மாஸ்கோவிற்கு அழைத்திருந்தது. இதனை மறுத்துள்ள ஜெலன்ஸ்கி, துணிச்சல் இருந்தால் பேச்சுவார்த்தை நடத்த புடின் உக்ரைனுக்கு வரலாம் என சவால் விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே, நாங்களும் நிறுத்துவோம் எனவும் போரை முடிவுக்கு கொண்டு வரவே தாங்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
News January 30, 2026
BREAKING: தங்கம் விலை மேலும் குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்துள்ளது. இன்று மதிய நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹350 குறைந்து ₹15,850-க்கும், சவரனுக்கு ₹2,800 குறைந்து ₹1,26,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹7,600 குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
News January 30, 2026
நான் கொச்சைப்படுத்தவில்லை: மா.சு விளக்கம்

தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் கோரி போராடுவது ‘பேஷன்’ ஆகிவிட்டது என அமைச்சர் மா.சு., கூறியதற்கு <<19000579>>அண்ணாமலை <<>>கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், போராட்டங்களை ஒருபோதும் கொச்சைப்படுத்தவில்லை என மா.சு விளக்கமளித்துள்ளார். போராட்டம் என்பது இயல்பாக நடக்க வேண்டும்; சிலர் தூண்டுதலால் நடக்க கூடாது; தேர்தல் நேரத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.


