News May 4, 2024

நெமிலி: மாமியார் உட்பட 3 பேருக்கு கத்திக்குத்து

image

நெமிலி தாலுகா நாகவேடு கிராமத்தை சேர்ந்தவர் சுசீலா. இவரது மருமகன் மதன். இவர்களுக்கிடையே நேற்று(மே 3) இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது சுசிலாவை மதன் கத்தியால் குத்தியுள்ளார். தடுக்க வந்த அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சுசீலாவின் இன்னொரு மகளான ரோஜா ஆகியோரையும் மதன் குத்தியுள்ளார். மதனை கிராம மக்கள் பிடித்து கட்டிப்போட்டு, காயமடைந்த 3 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Similar News

News November 7, 2025

ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவ.07) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் இணை இயக்குநர் செல்வராஜ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பின் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

News November 7, 2025

ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

ராணிப்பேட்டை காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை!

image

ராணிப்பேட்டை காவல்துறையினர் பொதுமக்களுக்கு இன்று (நவ.07) எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் வாட்ஸ் ஆப் போன்ற மெசேஜிங் ஆப்ஸ்கள் மூலம் வரும் APK கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தினர். இவை மொபைல் மற்றும் தனிப்பட்ட தகவல்களை ஆபத்துக்கு உள்ளாக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சந்தேகம் ஏற்பட்டால் www.cybercrime.gov.in -ல் புகார் செய்யவும் என கேட்டுக்கொண்டனர்.

error: Content is protected !!