News January 7, 2026

நாகை: மிக கனமழை எச்சரிக்கை!

image

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாகை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 16, 2026

நாகை: வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும் முருகன் கோயில்!

image

நாகை மாவட்டம் அருகே திருவிடைக்கழியில் சுப்ரமணிய சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள குரா மரத்தின் அடியில், இன்றும் முருகர் உலாவருவதாக ஐதீகம் உள்ளது. முருகன் தவமிருந்து சாபவிமோசனம் பெற்ற இங்கு முருகரும், ஈசனும் ஒரே சன்னதியில் காணப்படுகின்றனர். இங்கு சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.

News January 16, 2026

நாகை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ நாகை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04365-248121
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 16, 2026

நாகை: மனை வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள்<> www.onlineppa.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டிட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!