News January 7, 2026

கிருஷ்ணகிரியில் பிரச்னையா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதி சாலைகளில் குழி, பள்ளம், சீர்கேடு , குப்பைக் குவியல், நெடுஞ்சாலையில் பராமரிப்பின்மை போன்ற பிரச்னைகள் குறித்து புகார் அளிக்க தனித் தனியாக செயலிகள் உள்ளன:
1)சாலை சீரமைப்பு குறித்த புகார்களுக்கு: நம்ம சாலை APP
2)நெடுஞ்சாலை குறித்த புகார்களுக்கு: TNHW APP
3)சாலைகளில் குப்பைகள் அகற்ற: தூய்மை APP
இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க.(SHARE)

Similar News

News February 5, 2026

கிருஷ்ணகிரியில் உதவியவருக்கு அடி உதை!

image

மிட்டப்பள்ளியை சேர்ந்த பலராமன் என்பவர் நேற்று (பிப்.3) மாலை ஊத்தங்கரை சாலையில் மது போதையில் விழுந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஜலபதி பலராமனை சாலையில் இருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த பலராமனனின் மகன்கள் திலிப் (21), தீபன் (23), அஜித் (25) ஆகியோர் ஜலபதியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2026

கிருஷ்ணகிரி: தூக்கி வீசப்பட்டு இருவர் பலி!

image

தேன்கனிக்கோட்டை அருகே பெரியதோகரையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரகள் ராமாச்சாரி (36), முனிராஜ் (37). கடந்த பிப்.3-ம் தேதி இரவு இருவரும் பைக்கில் தேன்கனிக்கோட்டையில் இருந்து தளி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரம் நின்ற லாரி மீது பைக் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். தேன்கனிக்கோட்டை போலீசார் லாரி டிரைவர் உபேந்திரகுமாரை தேடி வருகின்றனர்.

News February 5, 2026

கிருஷ்ணகிரி: கழுத்தை நெரித்து கொன்ற கொடூர மனைவி!

image

ஒசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த தம்பதி பார்த்திபன் (32), அம்சவள்ளி (26). கடந்த பிப்.3-ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அம்சவள்ளி தனது இளைய மகனின் கண்முன்னே கணவரைக் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கணவன் தற்கொலை செய்ததாக நாடகமாடினார். உடம்பில் தற்கொலைக்கான காயம் இல்லாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதில் அம்சவள்ளி கணவரை கொன்றது தெரிய வந்தது.

error: Content is protected !!