News January 7, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 1, 2026

திருச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.

News February 1, 2026

திருச்சி: காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்

image

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட மாவட்டங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு, சைபர் கிரைம், சிபிசிஐடி உள்ளிட்டவற்றில் ஆய்வாளராக பணிபுரிந்த 47 பேரை, பணியிடமாற்றம் செய்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகள் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

திருச்சி: வேன் கவிழ்ந்து விபத்து – 14 பேர் காயம்

image

திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் உமையாள்புரம் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து நேற்று இரவு கவிழ்ந்தது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் ஆன்மீகப் பயணம் முடிந்து திரும்பியபோது இந்த விபத்து நேரிட்டது. இதில் வேனில் பயணித்த 14 பேர் காயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முசிறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!