News January 7, 2026
ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (30) நெடுங்குளத்தில் தனது உறவினரான செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.
Similar News
News February 4, 2026
சிவகாசி: மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் ரோட்டில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் இடையூறாக இருந்த மின் கம்பங்களை அகற்றி மாற்றி அமைக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் நடந்து வருகிறது. இப்பணியில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாறைப்பட்டியை சேர்ந்த முருகன்(35) ஈடுபட்டிருந்தார். அதில்ல் மின்கம்பத்தில் ஏறி பணி செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 4, 2026
விருதுநகர்: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

பாரத ஸ்டேட் வங்கி (SBI), நாடு முழுவதும் 2,050 வட்ட அளவிலான அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு Any Degree, பொறியியல், மருத்துவம், சார்ட்டர்ட் அக்கவுண்டிங் (CA), காஸ்ட் அக்கவுண்டிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆரம்ப ஊதியமாக ரூ.48,480 வழங்கப்படும். விண்ணபிக்க இங்கே <
News February 4, 2026
விருதுநகர்: ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது.. இனி EASY.!

விருதுநகர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <


