News January 7, 2026
திருவள்ளூர்: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News February 19, 2026
திருவள்ளூர்: மருந்து வாங்குவோர் கவனத்திற்கு!

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!
News February 19, 2026
திருவள்ளூரில் இலவச திறன் பயிற்சி!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின்படி, NTPC நிறுவனத்தின் CSR நிதியுதவியுடன் Assistant Machine Operator பயிற்சி வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 மாத பயிற்சிக்காலத்தில் தங்குமிடம், உணவு, மாதம் ரூ.2000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940188582, 7598145203, 9841126297 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News February 19, 2026
திருவள்ளூர்: தாய்ப்பால் குடித்த குழந்தை பலி!

மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் இம்ரான், ஸ்ரீதேவி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று (பிப்.18), குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருந்த போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


