News January 7, 2026
மதுார் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. மதுார், அருங்குன்றம், சித்தாலபாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிபேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி.
Similar News
News January 23, 2026
ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் (31), திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த அவர், நேற்று ஸ்ரீபெரும்புதூர் அருகே வெங்காடு கிராமத்தில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். இதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 23, 2026
காஞ்சியில் அதிகாலையே பயங்கரம்!

காஞ்சி மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீயால் தொழிற்சாலை முழுவதும் புகைமண்டலமானது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தொழிலாளர்கள் காயமின்றி தப்பினர். மின் கசிவு காரணமா என்பது குறித்து படப்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 23, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.22) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


