News January 7, 2026
வேதனையின் உச்சத்தில் வேடசந்துார் விவசாயிகள்!

வேடசந்துார்: நரசிங்கபுரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் குடகனாறு அணைக்கு வர வேண்டிய தண்ணீர் திசைமாறிச் செல்கிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதிப்படைந்துள்ள விவசாயிகள், நீரை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக 2020-ல் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்னும் வெளியாகாததால் வேதனை. தமிழக முதல்வர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்
Similar News
News January 17, 2026
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திண்டுக்கல் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம்.ஷேர்!
News January 17, 2026
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திண்டுக்கல் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம்.ஷேர்!
News January 17, 2026
கொடைரோடு அருகே ரத்தக் களறியான கொடூரம்!

திண்டுக்கல் கொடைரோடு மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறில், ராஜதானிக்கோட்டையைச் சேர்ந்த மனோஜ் தரப்பினர் ஆரோக்கிய வினோத் என்பவரின் வீட்டிற்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த ரிச்சர்டு வினோத்துக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மனோஜ், மருதுபாண்டி, அரவிந்த் ஆகிய மூவரை அம்மைநாயக்கனூர் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


