News January 7, 2026

ஓசூரில் குளத்தில் விழுந்து தற்கொலை!

image

கிருஷ்ணகிரி: ஓசூர் ஹவுசிங் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(69), ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சிகிச்சைகள் பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், தேர்பேட்டை பச்சை குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்ட ஓசூர் டவுன் போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 11, 2026

கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் இன்று (பிப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக காலை 9- 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹௌசிங் போர்டு பேஸ் 1 மற்றும் 2, கலெக்டரேட், ஓல்ட்பேட், கட்டிநாயனஹள்ளி, அரசு கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

News February 11, 2026

கிருஷ்ணகிரி: கோயிலுக்கு சென்றவர் பரிதாப பலி!

image

ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் பிப்-09 அன்று அருகே உள்ள எல்லம்மாள் கோவிலுக்கு செல்லும் போது வழியில் விஷப்பாம்பு கடித்தது. பின்னர் அவர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிப்-10 சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 11, 2026

கிருஷ்ணகிரி: எலி பேஸ்ட் சாப்பிட்டு குழந்தை பலி!

image

பர்கூர் அடுத்த சென்னப்பா நகரை சேர்ந்த உதய்குமார், மகன் தன்விக் (2). கடந்த பிரவரி 5-ம் தேதி சிறுவன் வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்டை கோல்கேட் என நினைத்து சாப்பிட்டுள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் பிப்-9-ம் தேதி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!