News January 7, 2026
பொங்கல் பரிசு.. அரசு புதிய உத்தரவு

பொங்கல் தொகுப்புக்கான சர்க்கரை, அரிசி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில், இன்றைக்குள் கரும்பும் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளுக்கு சென்று சேரும். இந்நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு 200 – 300 ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொகுப்பை வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பறந்துள்ளது.
Similar News
News February 6, 2026
கொடூரம்.. பெற்ற மகளை கர்ப்பமாக்கிய அப்பா

ஒவ்வொரு பெண்ணுக்கும் அப்பாதான் முதல் ஹீரோ. ஆனால், மும்பையில் வாய் பேச முடியாத 20 வயது பெண்ணுக்கு அவரது தந்தையே வில்லனாகியுள்ளார். வயிற்று வலி காரணமாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றபோது, அப்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸ், 16 பேரிடம் DNA பரிசோதனை நடத்தியது. இதில், அப்பெண்ணின் தந்தையே கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த கொடூரனை என்ன செய்வது?
News February 6, 2026
டெல்லியில் 500 பெண்கள் மாயமானது உண்மையா?

<<19048536>>டெல்லியில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள்<<>> மாயமானதாக வெளியான தகவல்கள் அனைத்தும் பெய்டு புரொமோஷன் என போலீசார் விளக்கமளித்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 800 பேர் மாயமானதாக பரவிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட பெய்டு புரொமோஷன் என குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்களிடையே இதுபோன்று பீதியை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
News February 6, 2026
அதிமுகவுடன் கூட்டணி இல்லையா?

EPS தலைமையில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் சிலர் அதிமுக-தேமுதிக கூட்டணி பற்றி கேட்க, பிரேமலதா 14 தொகுதிகளை கேட்பதாகவும், இதனால் கூட்டணி கணக்கு வேலைக்கு ஆகாது எனவும் EPS வெளிப்படையாகவே கூறியதாக தகவல் கசிந்துள்ளது. எனவே இதனை அறிந்த தேமுதிக தரப்பு தற்போது திமுக அல்லது தவெக ஆகிய இரு ஆப்ஷன்களை மட்டுமே வைத்திருப்பதாக கூறப்படுகிறது.


