News January 7, 2026
விழுப்புரத்தில் பரபரப்பு – குளத்தில் மிதந்த சடலம்!

விழுப்புரம்: புளிச்சப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அகமத் கான். இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அகமத் கான் காணாமல் போனார். அதைத்தொடர்ந்து அவரது மகள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டின் அருகேயுள்ள குளத்தில் சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது அகமத் கான் சடலமாக கிடைத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News February 9, 2026
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அறிவுறுத்தலின்படி தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு மாநில நெடுஞ்சாலைகள்) த.அம்பாயிரநாதன் தலைமையில், அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை இன்று (பிப்.09) ஏற்றுக்கொண்டனர். உடன் விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News February 9, 2026
விழுப்புரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


