News January 6, 2026
நீதியை நிலைநாட்டியதால் மகிழ்ச்சி: நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்து, <<18776761>>HC மதுரைக் கிளை<<>> மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தீபத்தூண் என்றும் கோயிலுக்கே உரித்தானது என ஆணித்தரமாக நிலைநாட்டிய கோர்ட்டுக்கு நன்றி என கூறிய அவர், தொடர்ந்து இந்து விரோத விஷத்தை உமிழ்ந்துவரும் திமுக, கோட்டையில் இருந்து துரத்தியடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 3, 2026
விஜய்க்கு இதனால் பின்னடைவா?

பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய், வேலூரில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி பிப்ரவரி இறுதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. அதேநேரம், நீண்ட நாள்களாக மக்கள் சந்திப்பு நடத்தாமல் இருப்பது, செய்தியாளர்களையே சந்திக்காமல் உள்ளது ஆகியவை விஜய்க்கு பின்னடைவை ஏற்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 3, 2026
டிரம்பிடம் சரணடைந்த மோடி: காங்கிரஸ்

இந்தியா தொடர்பான அனைத்து முடிவுகளும் வாஷிங்டனிலேயே(டிரம்ப்) எடுக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர், வெனிசுலாவில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, இந்தியா – US வணிக விவகாரம் என எல்லா முடிவுகளின் அறிவிப்பையும் டிரம்ப் மட்டுமே வெளியிடுகிறார் என அவர் குறிப்பிட்டுள்ளார். PM மோடி அவரிடம் முழுவதுமாக சரணடைந்துவிட்டதாகவும் சாடியுள்ளார்.
News February 3, 2026
திமுகவுடன் ஓபிஎஸ் ரகசிய ஆலோசனை?

அதிமுகவில் OPS-ஐ இணைக்கமாட்டேன் என EPS திட்டவட்டமாக கூறிவிட்டார். இதையடுத்து திமுகவுடன் OPS ஆலோசித்ததாகவும், சாதகமான பதில் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. எப்படியாவது அதிமுகவில் இணைந்தால் மட்டுமே தனக்கும், வாரிசுகளுக்கும் பாதுகாப்பு என்ற முடிவுக்கு வந்துள்ள OPS, அக்கட்சியில் அவைத்தலைவர் பதவிகேட்டு பாஜக தலைவர்கள் மூலம் தூது அனுப்பி அமைதி காக்கிறாராம். OPS-ன் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா?


