News January 6, 2026
கோவையில் மனைவி பிரிந்த ஏக்கத்தில் விபரீத முடிவு!

கோவை செல்வபுரம் என்.எஸ்.கே வீதியை சேர்ந்தவர் தனுஷ். நகை பட்டறை தொழிலாளி. மது அருந்தும் பழக்கமுடைய தனுஷ் தினமும் மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தினமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனமுடைந்த தனுஷ் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 25, 2026
கோவையில் செவிலியர் தற்கொலை

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு, தற்கொலை காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 25, 2026
கோவை: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

கோவை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0422-2220351 தெரிவியுங்க. (SHARE பண்ணுங்க)
News January 25, 2026
கோவை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

கோவை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <


