News January 6, 2026

தி.மலை அருகே பூட்டிய வண்டிக்கும் ஆப்பு!

image

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல் போவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில், காவல் ஆய்வாளர் பொன்ராஜன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சல்மான் (29) & திருவடத்தனூரை சேர்ந்த முன்னா கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 15-க்கும் மேற்பட்ட டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

Similar News

News January 25, 2026

திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு ALERT!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை தற்போது நிலவுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தி.மலை மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

News January 25, 2026

தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

திருவண்ணாமலை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News January 25, 2026

தி.மலை: ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழப்பு!

image

திருவண்ணாமலை, ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் நரேஷ் (18), நிலத்தில் இருந்த தாத்தாவிற்கு உணவு கொண்டு சென்றபோது, விருப்பாட்சிபுரம் ஏரியில் கால் கழுவ முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!