News January 6, 2026

திருப்பத்தூர்: வீட்டில் திட்டியதால் வாலிபர் விபரீத முடிவு!

image

ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர் நேற்று (ஜன.4) இரவு பெற்றோர் கண்டித்ததால் கோபத்தில் வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

திருப்பத்தூர்: கை குழந்தையுடன் பெண் கதறல்!

image

பொன்னேரியை சேர்ந்தவர் அகிலா. இவரது கணவர் தியாகராஜன். கணவன் மனைவி இடையே பிரச்சனை காரணமாக அகிலாவை அவரது கணவர் வீட்டில் சேர்க்காமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவனுடன் சேர்த்து வைக்க கோரி திருப்பத்தூர் கோர்ட்டில் அகிலா வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் கணவன் வீட்டின் முன் கை குழந்தையுடன் தனது 35 பவுன் நகையை மீட்டு தரக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

News January 25, 2026

திருப்பத்தூரில் பெண் தலை நசுங்கி பலி!

image

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெத்தகல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கலைவாணி. இவர் நேற்று (ஜன.24) அதே பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மேல்மருவத்தூருக்கு பக்தர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, கலைவாணி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கலைவாணி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 25, 2026

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஜன,24 இரவு முதல் இன்று காலை வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு முழுவதும் பிணியில் ஈடுபடுவார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் இரவு நேரத்தில் உதவி தேவை என்றால் போலீஸ் அதிகாரிகளுக்கு மேலே உள்ள எண்களை அழைக்கலாம். ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!