News May 3, 2024
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் முதல்வர்

நீர் நிலைகளை பாதுகாக்காமல், ஏரி, குளங்களை திமுகவினர் ஆக்கிரமித்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அணைகளை தூர்வாராததால் முழு கொள்ளளவில் நீரைத் தேக்க முடியவில்லை என விமர்சித்த அவர், குழுவை அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாடு பாலைவனமாகும் வரை திமுக காத்திருக்குமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 17, 2025
காமராஜர் பொன்மொழிகள்

*உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். *சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும், எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல, பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை. *எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல, ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும். *சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான்.
News November 17, 2025
SIR பணியில் இருந்த BLO தற்கொலை: வேலை அழுத்தமா?

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் SIR பணியில் இருந்த BLO அனீஷ் ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். SIR பணி அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3 முக்கிய அமைப்புகள் BLO பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
News November 17, 2025
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள்

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஆந்திர மாநிலம் காக்கிநாடா, மச்சிலிப்பட்டினம், நரசாப்பூரில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தெலங்கானாவின் சார்லபள்ளியில் இருந்தும் அடுத்த 2 மாதங்களுக்கு 3 சிறப்பு ரயில்கள் தமிழகம் வழியாக இயக்கப்படுகின்றன.


