News May 3, 2024
கஞ்சா என்று சாணத்தை விற்றவர்கள் கைது

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்கலம் சாலை பகுதியில் வாகன சோதனையின்போது, கஞ்சா பாக்கெட்டுடன் விற்ற இருவர், வாங்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். சோதனையில், அது வெறும் மாட்டு சானம் என்று தெரியவந்தது.
Similar News
News February 17, 2026
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்ய உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்படும்.
News February 17, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 17, மாசி 5 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News February 17, 2026
EPS – நயினார் திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

EPS நயினார் நாகேந்திரன் சந்திப்பில் முக்கியமாக மதுரையில் நடைபெற உள்ள NDA பொதுக்கூட்டம் பற்றியே ஆலோசிக்கப்பட்டதாம். இந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பது குறித்தும் அவர்களுக்கான தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டுள்ளது. மதுரை பொதுக்கூட்டத்துக்கு மோடி வரும் நிலையில், அதற்கு முன்பாகவே தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிடலாம் என்பதை நயினார், EPS-யிடம் வலியுறுத்தியுள்ளாராம்.


