News January 6, 2026

தஞ்சை: கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

image

கும்பகோணத்தில் கடந்த 2019-ஆண்டு பணம் கொடுக்கல், வாங்கலில் அருண் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமார், வெங்கடேசன், சந்திரசேகரன், கதிர், பாலகுரு உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Similar News

News February 5, 2026

தஞ்சை: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

image

தஞ்சை மக்களே, உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. <>இங்கே க்ளிக் செய்து<<>>, TamilNilam செயலி மூலம் நிலத்தின் ஒட்டுமொத்த ஜாதகத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் நில வரைபடம், பட்டா / சிட்டா, உரிமையாளர் விவரம், நில பரப்பளவு உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News February 5, 2026

தஞ்சை: தங்க நகை இருக்கா? உஷார்!..

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <>இங்கே க்ளிக் செய்து<<>>, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE IT!

News February 5, 2026

தஞ்சை: மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண்

image

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை வித்யாநகரைச் சேர்ந்த அனீஷ் பாத்திமா நேற்று தன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கணவரைப் பிரிந்து காலணி கடை நடத்தி வந்த இவர், தன் மகள்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய நிலையில், பிற்பகலில் உறவினர் ஒருவர் வந்து பார்த்தபோது படுக்கை அறையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதையடுத்து மருத்துவக் கல்லூரி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!