News May 3, 2024

துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த 4 பேர் கைது

image

ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை கிருஷ்ணா நகை கடையில் ஏப்.16ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையடிக்கப்பட்ட 2.5 கிலோ தங்கத்தில் 700 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 8 குற்றவாளிகளில் 4 பேர் கைது செய்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 26, 2025

திருவள்ளூர்: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

image

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுங்க*

News August 26, 2025

திருவள்ளூர்: தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.70,000 சம்பளம்!

image

திருவள்ளூர் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு எழுத்து தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். SHARE பண்ணுங்க! விபரங்களுக்கு இங்கு <<17520451>>கிளிக்<<>> பண்ணுங்க.

News August 26, 2025

அச்சுத்துறை பணிக்கு விண்ணப்பிக்கும் முறை

image

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி, அதன் மேல்புறம் self Attested செய்ய வேண்டும். விண்ணப்பத்தை வரும் 19.09.2025 தேதி மாலை 5.30 மணிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!