News January 6, 2026
8 பேரை கடித்த வெறிநாய் மக்கள் பீதி

செங்கல்பட்டு, வெடால் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த வெறிநாய் ஒன்று தேவி(50) என்பவரின் காலை கடித்துவிட்டு தப்பியோடியது.இதைத் தொடர்ந்து ரத்தினம் (50), கண்ணப்பன்(55), முனியம்மாள் (60),சீதா 40) உள்ளிட்ட எட்டு பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பசு கன்றுகளையும் கடித்துள்ளது. காயமடைந்தோர் இடைக்கழிநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Similar News
News February 19, 2026
அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞருக்கு தாட்கோ மூலம் இலவச அழகு கலை பயிற்சி வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு முடித்த 18-35 வயது வரை உள்ள இருபாலரும் இதில் பங்கேற்கலாம். 90 நாட்கள் பயிற்சி முடித்தவுடன் ரூ.18,000- 25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News February 19, 2026
செங்கல்பட்டு: தீ பற்றி எரிந்த 10 கார்கள்!

மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் குற்ற வழக்குகளிலும், சாலை விபத்துகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட 10 கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
News February 19, 2026
செங்கல்பட்டு: 3 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு!

புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் இறையன்பு(21). இவர் பழைய பெருங்களத்தூர், கிரீன் சிட்டி பகுதிக்கு இறையன்பு மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர். அப்போது அங்கு இருந்த மற்றொரு தரப்புக்கும், இறையன்புவின் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கும்பல் இறையன்புவின் வீட்டிற்கே சென்று வெட்டியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த அவரின் தந்தை, சித்தப்பாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.


