News January 5, 2026
கரும்பு கொள்முதல்.. அரசை விளாசிய அன்புமணி

பொங்கல் தொகுப்புக்கான கரும்பை, உழவர்களிடமே அரசு நேரடியாக கொள்முதல் செய்யுமாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கரும்பு கொள்முதல் பற்றி இதுவரை அரசு அறிவிக்காததால், அதை இடைத்தரகர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு கரும்புக்கு ₹35 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைத்தரகர்கள் தலையீட்டால் உழவர்களுக்கு ₹15 மட்டுமே கிடைக்கும் என அவர் X-ல் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 4, 2026
அதிமுக Ex MLA திமுகவில் இணைந்தார்.. EPS அதிர்ச்சி

திண்டிவனம் அதிமுக முன்னாள் MLA ஹரிதாஸ், CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அண்மையில் தான் அதிமுக Ex MLA-க்கள் சின்னசாமி, மாதேஸ்வரன் ஆகியோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதேநேரம், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் சமீபத்தில் இணைந்தார். அடுத்தடுத்து அதிமுக முக்கிய முகங்கள் கட்சி மாறுவது EPS-க்கு அதிர்ச்சியளித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News February 4, 2026
லோக் சபாவில் கடும் அமளி.. அவை ஒத்திவைப்பு

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, 2-வது நாளாக லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நேற்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நேற்று அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து இன்றும் எதிர்க்கட்சி MP-க்கள் அமளியில் ஈடுபட்டதால் லோக் சபா 12 மணிவரை ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
News February 4, 2026
ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு ஏன் அச்சம்? CM

நாடாளுமன்றத்தில் <<19042390>>ராகுல் காந்தி<<>> கேட்கும் கேள்விகளை கண்டு மத்திய அரசு ஏன் அஞ்சுகிறது என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக MP-க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு விளக்கம் தர மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் லோக்சபாவில் 8 MP-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


