News January 5, 2026
ஜாமின் இல்லை: சிறைவாசத்தை உறுதி செய்த SC

கடந்த 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள உமர் காலித், ஷர்ஜில் இமாமுக்கு மீண்டும் ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ல் நடந்த CAA போராட்டத்தில் வெடித்த கலவர வழக்கில் JNU மாணவர் உமர் காலித் உட்பட 7 பேர் கைதாகினர். அவர்களில் 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் FIR பதியப்பட்டது. இந்நிலையில் 5 ஆண்டுகளாக 7 பேரும் ஜாமீனுக்கு போராடி வந்த நிலையில், காலித்-ஷர்ஜில் தவிர 5 பேருக்கு SC ஜாமின் வழங்கியுள்ளது.
Similar News
News February 6, 2026
வசூல் ராஜாவாக மாறிய விஜய்: பாஜக

தவெகவை வியாபார கழகமாக விஜய் மாற்றிவிட்டார் என பாஜக தெரிவித்துள்ளது. ரசிகர்களையும், தொண்டர்களையும் அடமானம் வைத்து தேர்தலில் திமுகவை வெற்றிபெற வைக்கும் வசூல் ராஜாவாக விஜய் இருப்பதாகவும் பாஜக சாடியுள்ளது. மேலும், திமுக – தேர்தல் வியாபாரியான ஆதவ் அர்ஜூனா போட்ட ஒப்பந்தப்படி விஜய் செயல்படுவதோடு, தலையாட்டி பொம்மை போல் நடப்பதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளது.
News February 6, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மே 1 – 31 வரை ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் நிலவும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. So, குழந்தைகளே நீங்கள் ஜாலியாக விளையாடலாம், பெற்றோர்களே நீங்களும் டூர் செல்ல திட்டமிடலாம்.
News February 6, 2026
இன்று தை கடைசி வெள்ளி.. இதை மறக்காம பண்ணிடுங்க

எலுமிச்சை மாலை சாற்றுவதன் மூலம், அம்மனின் முழு அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆடி மாதமும், தை மாதமும் அம்மனுக்கு விசேஷமான காலங்கள் என்பதால், தை கடைசி வெள்ளி கிழமையான இன்று அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று தவறாமல் எலுமிச்சை பழ மாலை சாற்றி வழிபடுங்கள். குறிப்பாக, ராகு காலத்தில் துர்கையம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி, எலுமிச்சை தீபம் ஏற்றினால் ராகு தோஷம் நீங்கும் என்பது ஆன்மிக மரபு.


