News May 3, 2024
கோவில் திருவிழாவில் மோதல்- 14 பேர் கைது

உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும், மாணிக்கம் என்பவருக்கும் நில தகராறு காரணமாக முன்பகை இருந்துள்ளது. நேற்று கோவில் திருவிழா மஞ்சள் நீராட்டு விழாவின் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கைகலப்பாக மாறி இருதரப்பும் கம்பு கற்களால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் 8 பேர் காயமடைந்த நிலையில் இரு தரப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
Similar News
News August 27, 2025
மதுரை : உங்கள் பகுதியில் மின்தடையா?

மதுரை மாவட்ட மின்சாரத்துறை நிர்வாக பொறியாளர் அலுவலக புகார் எண்கள்
▶️கே. புதூர் – 04522561754
▶️சமயநல்லூர்- 04522463429
▶️திருப்பள்ளி – 04522682904
▶️மேற்கு மதுரை – 04522605113
▶️தெற்கு மதுரை – 04522333707
▶️உசிலம்பட்டி – 04522252141
▶️திருமங்கலம் – 04549280775
அனைவருக்கும் SHARE செய்ங்க கண்டிப்பாக உதவும்.
News August 27, 2025
மதுரையில் நாளை மின் நுகர்வோர் கூட்டம்

மதுரை அரசரடி மேற்கு கோட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் மதுரை மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தலைமையில் நடக்கிறது. எனவே மதுரை மேற்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் மின் சம்பந்தப்பட்ட குறைகளை நேரிலோ அல்லது மனுக் கள் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம்.
News August 26, 2025
மதுரை: தேர்வு இல்லாமல்..உள்ளூரில் அரசு வேலை.!

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் <