News January 5, 2026
தருமபுரியில் ஆள் மாறாட்டம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராஜ பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னா கவுண்டர், மலேசியாவில் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான ஊரில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. சின்னா கவுண்டர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னா கவுண்டர் எனும் மற்றொரு நபர் அந்த நிலத்திற்கு தனது பெயரை வைத்து போலிப் பத்திரத்தை தயாரித்து உறவினருக்கு விற்க முயன்றார். இதுகுறித்த புகாரில் இருவர் கைதானனர்.
Similar News
News January 30, 2026
தருமபுரி: உங்க வாட்ஸ்-ஆப் பாதுகாப்பா இருக்கா? CLICK

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 30, 2026
கிருஷ்ணகிரி: கணவன் கண் முன்னே மனைவி பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம். பாரதி நகரை சேர்ந்தவர் மாதையன் (57), மனைவி தனலட்சுமி (48). இருவரும் நேற்று (ஜன.29) தருமபுரியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின் பைக்கில் மாட்டலாம்பட்டி அருகே வந்த போது பைக் மீது லாரி மோதியது. இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மாதையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 30, 2026
தருமபுரியில் தூக்கி வீசப்பட்டு பலி!

பெருங்காட்டை சேர்ந்த தொழிலாளி கன்னியப்பன் (33). இவர் தனது குடும்பத்துடன், பாப்பாரப்பட்டியிலுள்ள செங்கல் சூளையில் தங்கி பணி செய்து வந்தார். இவர் செங்கல் சூளைக்கு பைக்கில் சென்ற போது ஏரிக்கரை அருகே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கன்னியப்பன் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் கிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


