News January 5, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

திருநாவலூர் ஒன்றியம் காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீதிதாஸ் என்பவர் கடந்த ஜூன்.3 ஆம் தேதி சேலம் சாலை, ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News January 14, 2026
கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News January 14, 2026
உழவர் சந்தையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று சமத்துவ பொங்கல் விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் மற்றும் உழவர் சந்தையில் பணியாற்றும் பணியாளர்கள் என பலரும் புது பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
News January 14, 2026
கள்ளக்குறிச்சி: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

கள்ளக்குறிச்சி மக்களே, பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!


