News January 5, 2026
மயிலாடுதுறை: மனைவி தள்ளியதால் கணவன் பலி!

மணல்மேடு பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (42) எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் அவர் ரஞ்சிதாவை தாக்க முற்பட்ட போது ரஞ்சிதா தடுக்க முயன்றார். அப்போது தடுமாறி ராஜீவ்காந்தி சுவரில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து ரஞ்சிதா மறுநாள் காலையில் பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரஞ்சிதாவை கைது செய்தனர்
Similar News
News January 12, 2026
மயிலாடுதுறை: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு <
News January 12, 2026
மயிலாடுதுறை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மயிலாடுதுறை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 12, 2026
மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை மாவட்டத்தில், அதிகபட்சமாக சீர்காழியில் 10.20 மிமீ மழை பதிவாகியுள்ளது. தரங்கம்பாடியில் 9 மிமீ, செம்பனார்கோவிலில் 8 மிமீ, மணல்மேட்டில் 5 மிமீ, கொள்ளிடத்தில் 6.80 மிமீ, மயிலாடுதுறையில் 1 மிமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


