News January 5, 2026
சரவணம்பட்டியில் கடன் தொல்லையால் தற்கொலை

சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிஜேஷ் (42). இவர் தொழில் செய்வதற்காக கடன் வாங்கியதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்றிரவு தனது உறவினருக்கு வாய்ஸ் SMS அனுப்பி விட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
உக்கடம் அருகே விபத்து: மாணவன் பலி

தேனியைச் சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் பீளமேடு பகுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது பைக்கில் உக்கடத்தில் உள்ள ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் பீளமேடு நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது உக்கடத்தில் சாலையோர தடுப்பில் பைக் மோதியது. இதில் நிரஞ்சன் பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 26, 2026
கோவை: 12th போதும்.. ரூ.44,000 சம்பளம்

இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 312
3. வயது: 18 – 40
4. சம்பளம்: ரூ.44,000
5. தகுதி: 12-ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 29.01.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 26, 2026
கோவை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

கோவை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)


