News January 5, 2026

நாகை: கட்டையால் தாக்கியதில் ‌பலி

image

கீழ்வேளூர் ஒன்றியம் ஆதமங்கலம் ஊராட்சி கீரங்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் ‌கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரவி (60) உயிரிழந்த நிலையில், கார்த்தி (40) அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பிரகாஷ், சக்திவேல், சிவபாலன் ஆகிய மூவரை வலிவலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 1, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட ரேஷன் பொருள்கள் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், பிப்.02-ம் தேதி முதல் 65 வயதிற்கும் மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன. தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் பெறும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHARE பண்ணுங்க!

News February 1, 2026

நாகை: சாராய விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ்.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நேற்று (ஜன.31) கீழ்வேளூர் மற்றும் வெளிப்பாளையம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மாவட்ட காவல்துறை அலுவலக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 1, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில், நேற்று (ஜன.31) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!