News May 3, 2024
நாளை இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாமக்கல், கரூர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 17, 2025
இனி டேட்டாவிற்கு பாதுகாப்பு! புதிய விதிகள் அமல்!

வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில் நமது டேட்டாக்கள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய அரசு புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகளை கொண்டு வந்துள்ளது. டேட்டாக்கள் திருடப்பட்டால் 72 மணி நேரத்திற்குள் தெரிவித்தால் போதும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். விதிகள் முழுமையாக செயல்பாட்டுக்கு வர 12-18 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
BREAKING: அமைச்சர் காந்தி ஹாஸ்பிடலில் அனுமதி

கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வேலூரில் உள்ள சிஎம்சி ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நலக் குறைவுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இன்று மாலை கூட்டுறவுத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


