News January 4, 2026

தருமபுரி: விதிமீறி செயல்பட்ட 16 மின்னணு தராசுகள் பறிமுதல்

image

தருமபுரி தொழிலாளா் நலத் துறை துணை ஆய்வாளா் அ.சு.சாந்தி தலைமையில் உதவி ஆய்வாளா்கள் ப.திவ்யா, முத்திரை ஆய்வாளா் வீ. தீபாபாரதி ஆகியோா் தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனா். அதில் எடையில் குறைபாடு, முத்திரையிடப்படாதது என விதிமுறைகளை மீறி பயன்படுத்தப்பட்ட 16 மின்னணு தராசுகளை, தருமபுரி தொழிலாளா் துறையினா் பறிமுதல் செய்தனா். பின் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 10, 2026

தருமபுரி: அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!

image

சோமனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கடந்த 5-ந் தேதி வகுப்பறையில் கணினி ஆய்வக உதவியாளர் தூண்டுதலினால் இரும்பு ஸ்கேலில் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதில் காயமடைந்த மாணவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர் கலைந்து சென்றனர்.

News February 10, 2026

தருமபுரியில் பயங்கர தீ!

image

ஆலமரத்துப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையின் குடோனுக்கு நேற்று முன்தினம் (பிப்.8) தொழிலாளி மாசிலாமணி (55) சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் குடோன் தீ பிடித்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பட்டாசுகளை இருப்பு வைக்க அனுமதியின்றி கோழி பண்ணையை குடோனாக பயன்படுத்திய சக்திவேல் (39) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2026

தர்மபுரி : ரோந்து பணி காவல‌ர்க‌ள் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 09) இரவு முதல் நாளை காலை (பிப்- 10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!