News May 3, 2024
இந்தியாவில் 2 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கம்

இந்தியாவில் கடந்த 4 மாதத்தில் 2,23,10,000 கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பயனர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மார்ச் மாதத்தில் 79 லட்சம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 1,20,00,000 வாட்ஸ்அப் கணக்குகள் மட்டுமே நீக்கப்பட்டன.
Similar News
News September 22, 2025
நண்பர்களுக்கு கடன் கொடுப்பீர்களா?

நண்பர்கள், உறவினர்களுக்கு கடன் கொடுத்தவர்களில் 73% பேருக்கு, பணம் திரும்ப வருவதில்லை என்கின்றது லெண்டிங் ட்ரீ நிறுவனத்தின் சர்வே. அதுமட்டுமல்ல, இதனால் உறவு பாதிக்கப்படுவதாக 25% பேரும், ஏன் கொடுத்தோம் என வருந்துவதாக 43% பேரும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும், எந்த பிணையமோ, ஒப்பந்தமோ, நிபந்தனையோ இல்லாமல் இந்த கடன் கொடுக்கப்படுகிறது. பின் இதுவே பிரச்னைக்கு காரணமாகிறது. உங்க அனுபவம் எப்படி?
News September 22, 2025
அமெரிக்காவின் H-1B-க்கு போட்டியாக சீனாவின் ‘K விசா’

உலகம் முழுவதும் உள்ள திறமையாளர்களை தங்கள் நாட்டில் பணியாற்ற ஈர்க்கும் வகையில் சீனா K விசாவை அறிமுகம் செய்கிறது. அக்.1 முதல் அமலுக்கு வரும் இந்த விசா அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் & கணிதம் (STEM) துறைகளை சார்ந்தவர்களுக்கு பொருந்தும். அண்மையில் H-1B விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்கா ₹88 லட்சமாக உயர்த்திய நிலையில், சீனாவின் அறிவிப்பு இதற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது.
News September 22, 2025
அரசியல் படமாக வரும் சார்பட்டா – 2

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. திரைக்கு இப்படம் வரவில்லை என்ற பலர் வேதனைப்பட்ட நிலையில், சார்பட்டா – 2 குறித்த அப்டேட்டை ரஞ்சித் கொடுத்துள்ளார். கதை ரெடியாகிவிட்டதாகவும், சில மாறுதல்களை மேற்கொண்டு விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான அரசியல் காலகட்டத்தை இப்படம் பேசுகிறதாம்.