News January 4, 2026
கடன் உதவி: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட உள்ளது. ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும், 18 – 60 வயதுக்குட்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 3, 2026
நாகை: ரயில்வே கேட் மூடல்

வேதாரண்யம் – நாகப்பட்டினம் சாலை மார்க்கத்தில் தோப்புத்துறை பகுதியில் உள்ள ரயில்வே கேட் LCNo35 வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் (07-02-2026) சனிக்கிழமை அன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6:00 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
News February 3, 2026
நாகை: டூவீலர் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் கைகாட்டி பகுதியில் சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கடையில் மோதி டூவீலர் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில், புகைப்படக் கலைஞர் சுரேஷ்குமார் (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு கீழையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 3, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (பிப்.02) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.03) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


