News May 3, 2024

மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம் வருவதா ?

image

மஞ்சுவிரட்டு அனுமதிக்காக வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்துவது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வீரமுத்துப்பட்டியில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது, மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி பெற்றுத் தரக்கோரி மக்கள் பிரதிநிதிகளிடம் ஏன் முறையிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Similar News

News September 13, 2025

மதுரை: நாய் குறுக்கே வந்ததால் பலியான உயிர்

image

மதுரை பழைய விளாங்குடி காமாட்சி நகர் ஜெயபால் மகன் வீரக்குமார் (26). அதே பகுதி சாலையில் பைக்கில் சென்ற போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் வீரக்குமார் பிரேக் அடிக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகில் இருக்கும் காம்பவுண்ட் சுவரில் மோதியாது. சாக்கடை பள்ளத்தில் விழுந்த வீரக்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 13, 2025

மதுரை காமராசர் பல்கலை.யில் வேலை!

image

மதுரை காமராசர் பல்கலை-யில் கீழகண்ட 3 பணியிடங்களுக்கு காலிபணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
⏩பதவியின் பெயர்: JRF, Technical Assistant
⏩கல்வித்தகுதி:B.Sc, M.Sc
⏩மாத ஊதியம்:ரூ.20,000 டூ ரூ.37,000
⏩ கடைசி தேதி: 15.09.2025
⏩விண்ணப்பிக்கும் முறை: <>இங்கே க்ளிக் செய்து <<>>இதில் உள்ள முகவரிக்கு உங்க பயோ-டேட்டா/CVஐ இணைத்து அனுப்பவும்
⏩அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 13, 2025

மதுரை: பிரபல தொழிலதிபர்கள் இடங்களில் ரெய்டு

image

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர்கள் மணி (எ)முத்தையா மற்றும் மருது பாண்டியனுக்கு சொந்தமான எம்.வி.எம் நிறுவனங்களில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இவர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன் ‘இரிடியம்’ குறித்த பண மோசடி புகார் எழுந்தது. அடுத்தடுத்து புகார்கள் எழுந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று இங்கு சோதனையை நடத்தினர்.

error: Content is protected !!