News January 4, 2026

கடலூர்: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை!

image

குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சபரி மகள் இமையா (14). குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த இமையா கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். இதில் மனமுடைந்த இமையா நேற்று மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News February 3, 2026

கடலூர்: வாகன ஏலம் அறிவிப்பு – எஸ்.பி

image

கடலூர் மாவட்டத்தில் மது கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் வரும் பிப்.12, காலை 10 மணியளவில் 79 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என்றும், இதில் கலந்து கொள்ள விரும்புவோர் பிப்.10-ம் தேதி முன் வைப்பு தொகை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

‘அண்ணா புகழைப் போற்றி வணங்குகிறேன்’ – சிதம்பரம் MLA

image

‘தமிழன்னையின் தவப்புதல்வன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்த தமிழ் தாயின் தலைமகன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 57 வது நினைவு தினத்தில் அவர்தம் புகழை போற்றி வணங்குகிறேன்’ என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கடலூர் மாவட்ட செயலாளரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.ஏ. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

கடலூர்: 71,000 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 71 ஆயிரத்து 290 பேர் விண்ணப்பித்துள்ளதாக கடலூர் மாவட்டம் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!