News January 4, 2026
செங்கல்பட்டு: மகனை கல்லை போட்டு கொன்ற தந்தை!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சிவனேசன் (32), வாலிபர் மர்மச்சாவில் திடீர் திருப்பமாக கல்லால் தந்தையே மகனை கொன்று விட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. தினமும் சேமித்து வைத்து இருந்த பணத்தில் மது குடித்து விட்டு வரும் சிவனேசன் தந்தை மற்றும் தாயிடம் தகராறி ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆத்திரத்தில் தந்தையே கிரைண்டர் கல்லை போட்டு மகனை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News February 7, 2026
செங்கை: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

செங்கை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News February 7, 2026
செங்கல்பட்டில் பாதிப்பட்டுள்ள 10 கிராமங்கள்

செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் சாலையில், மேலமையூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் 9 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளன. நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரயில்வே துறையின் மெத்தனத்தால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க வேண்டியுள்ளது. கழிவுநீர் தேங்கி குப்பை மேடாக மாறியுள்ள இப்பகுதியை மாவட்ட ஆட்சியர் சினேகா நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News February 7, 2026
செங்கை: 5 பேர் அதிரடி கைது!

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விமான பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 23 கிலோ எடையுள்ள உயர் ரக கஞ்சாக்களை பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களில் பதுக்கி வைத்து கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட கஞ்சாக்களின் மதிப்பு 23 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.


