News May 3, 2024
விருதுநகர் பிளவக்கல் அணை சிறப்பு!

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான அணையாக இருக்கிறது பிளவக்கல் அணை. சிறப்புமிக்க இந்த அணை மலைகள் சூழ்ந்த பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் வெயிலை மட்டுமே பார்த்து வரும் கந்தக பூமி மக்களுக்கு இயற்கை வனப்புமிக்க இந்த பிளவக்கல் அணை ஒரு வரப்பிரசதமாய் விளங்குகிறது. இதன் அருகில் பூங்காவும் அமைந்துள்ளது. இந்த அணை ரூ.20 லட்சத்தில், 2002 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
Similar News
News August 13, 2025
சிவகாசியில் மீண்டும் ஒரு கொலை!

சிவகாசி: எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்(21), கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை தேடி வந்த நிலையில் எம்.புதுப்பட்டி காட்டுப்பகுதியில் தர்மலிங்கம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.
News August 13, 2025
விருதுநகரில் நாளை(ஆக.14) மறந்துடாதீங்க..!

விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் நாளை (ஆக.14) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இதில் 8-ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <
News August 13, 2025
விருதுநகர்: TASMAC கடைகளுக்கு பூட்டு.. ஆட்சியர் எச்சரிக்கை!

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் FL2/FL3/FL3A/FL3AA, FL11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை சுதந்திர தினமான ஆக.15 தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியாரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் கடைகள், மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.