News May 3, 2024
அரூர்: மது விற்ற வழக்கில் 87 பேர் கைது

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தா
தலைமையிலான போலீசார் கடந்த மாதம் முழுவதும் அரூர் கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் சாராயம், மதுபாட்டில்களை கள்ளத்தனமாக அதிக விலைக்குவிற்ற வழக்கில் 12 பெண்கள் உள்பட 87 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1,869 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராயம், 900 லிட்டர் சாராய ஊறல் 3 டூவிலர் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News August 27, 2025
தர்மபுரி மக்களே ட்ரோன் ஓட்ட ஆசையா?

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் செப்.9 முதல் 11 வரை ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ட்ரோன்களை இயக்குவது, விதிமுறைகள், அரசு தரும் மானியம், ட்ரோன்களை வைத்து தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் 9543773337 / 9360221280 எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 27, 2025
தர்மபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) 04342-233299 தர்மபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க*
News August 27, 2025
தர்மபுரி: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

விநாயகர் சதுர்த்தி நாளில் வீட்டில் பிள்ளையார் வைத்து, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், சுண்டல், மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைத்து வழிபடலாம் (அ) அல்லது தர்மபுரி சாலை விநாயகர் கோயிலுக்கு சென்று வரலாம். வழிபடுவதற்கான நேரம் : காலை 07.45 மணி முதல் காலை 08.45 மணி, 10.40 மணி முதல் பகல் 01.10 மணி, மாலை 05.10 மணி முதல் இரவு 07.40 மணி. SHARE IT