News January 3, 2026
CPS பென்ஷன்தாரர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!

<<18749969>>TAPS திட்டம்<<>> செயல்படுத்தப்பட்டபின், பென்ஷன் பெறுவதற்கான தகுதி, பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அனைத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும், CPS-ன் கீழ் பணியில் சேர்ந்து இடைப்பட்ட காலங்களில்(23 ஆண்டுகள்) ஓய்வு பெற்றவர்களுக்கும் சிறப்பு கருணை பென்ஷன் வழங்கப்படும் என அரசு கூறியுள்ளது. TAPS திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு ₹13,000 கோடி செலவாகும்.
Similar News
News February 13, 2026
₹5,000 கொடுத்தது சாதனையா? ஜெயக்குமார்

அதிமுக மகளிருக்கு ₹2,000 என அறிவித்ததற்கு கிடைத்த வரவேற்பை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சொத்து வரி, மின்சார வரி என மக்களிடம் திமுக காசு வசூலித்ததாக கூறிய அவர், மக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை மக்களிடமே கொடுப்பது சாதனையா எனக் கேட்டுள்ளார். மேலும், தோல்வி பயத்தால்தான் திமுக இப்படி அறிவித்துள்ளதாகவும், ஆனால் மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என்றும் பேசியுள்ளார்.
News February 13, 2026
₹5,000 உரிமைத் தொகை வரவில்லையா? இதை செய்யுங்க

1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் தலா ₹5,000 வரவு வைத்து தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தவர்களுக்கு இந்த ₹5,000 கிடைக்கவில்லை என்றால், உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம். அதுமட்டுமின்றி, முதல்வரின் முகவரி செயலி (அ) <
News February 13, 2026
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. ₹7 லட்சம் கோடி இழப்பு

ஐடி பங்குகளின் மதிப்பு சரிவால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626 புள்ளிகளிலும், நிஃப்டி 336 புள்ளிகள் சரிந்து 25,471 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவன பங்குகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. இதனால், முதலீட்டாளர்கள் சுமார் ₹7 லட்சம் கோடி வரை இழந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.


