News May 3, 2024

குண்டர் தடுப்பு சட்டம்-நீதிமன்றம் அதிரடி

image

பேஸ்புக் நட்பில் இருந்தவர் வன்கொடுமை செய்த புகாரில், குண்டர் சட்ட நடவடிக்கை தவறாக பயன்படுத்தப்படுவதாக நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்டவர் மதுரை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரிய மனு மீதான நேற்றைய விசாரணையில், குண்டர் சட்ட கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் முன்பு அதன் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், இந்த வழிமுறைகளை உள்துறை செயலர் பரிசீலித்து சுற்றறிக்கையாக வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

Similar News

News December 9, 2025

மதுரை: நடத்துநர் கொலைக்கு முன் நடந்த பகீர் சம்பவம்

image

திருமங்கலம் கல்லுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி தனியார் பேருந்து நடத்துனர். நேற்று நள்ளிரவு கப்பலூர் டோல்கேட் அருகே உள்ள பேக்கரியில் இருந்த போது, அங்கு வந்த நபர் அழகர்சாமியிடம் தகராறு செய்தார். இதில் அரிவாளால் அழகர்சாமியை அவர் வெட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த நபர் சிறிது நேரத்திற்கு முன் போஸ் என்ற முதியவரை வெட்டியதும் தெரிந்தது. கல்யாணகுமார் என்ற அந்நபரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

News December 9, 2025

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 9, 2025

மதுரை அருகே தீவைத்து முதியவர் தற்கொலை

image

அத்திப்பட்டி வடக்கு தெரு சின்னபாண்டி 60, இவர் வீட்டில் டூ வீலருக்காக பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு, அதே ஊரில் உள்ள சுடுகாட்டுக்கு சென்று உடலில் பெட்ரோலை ஊற்றி அவரே தீ வைத்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் சிகிச்சை பலனின்றி, இறந்தார். சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!