News January 3, 2026

வேலூர்: நாட்டுக்கோழிகள் வளர்க்க 50% மானியம்!

image

வேலூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 19, 2026

வேலூரில் மூதாட்டி திடீர் சாவு!

image

துத்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நேற்று (ஜன.18) மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இவரை பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுயநினைவின்றி காணப்பட்ட மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பாகாயம் போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

வேலூர்: மாநகர காங்கிரஸ் தலைவர் நியமனம்

image

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேலூர் மாநகர மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்த ராமனின் பதவி காலம் முடிவடைந்தது. இதையடுத்து வேலூரில் 32 ஆண்டுகளாக காங்கிரஸ் சிறுபான்மை அணி தலைவராக பணியாற்றி கொண்டிருக்கும் எம்.வாஹித் பாஷா இன்று (ஜன.19) மாநகர காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News January 19, 2026

அறிவித்தார் வேலூர் கலெக்டர்!

image

புதிரை வண்ணார் (SC) சமூக மக்களுக்கு சாதிச்சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, புதிரை வண்ணார் நல வாரிய அட்டை, போன்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் ஜனவரி 20 முதல் 22 வரை நடைபெற உள்ளது. வேலூர் வட்டாட்சியர் அலுவலகம், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைப்பெற உள்ள இம்முகாம்களை பயன்படுத்துமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!