News January 3, 2026
நெல்லை போலீஸ் அதிரடி அறிவிப்பு

‘திருநெல்வேலி மாநகர பகுதிகளில், இன்று (ஜன.3) அதிகாலை முதல் 15 தினங்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டஙகள், மறியல்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவை நடத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் N.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அமைதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
நெல்லை: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

நெல்லை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1 இங்கு <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
நெல்லை: மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

திசையன்விளை அருகே குமாரபுரத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரி (79). இவருக்கு சுந்தரலிங்கம் (49) என்ற மகன் உள்ளார். சுந்தரலிங்கத்திற்கு திருமணம் ஆகவில்லை. மேலும் இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வருத்ததில் இருந்த கல்யாணசுந்தரி நேற்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். உடலை கைப்பற்றிய திசையன்விளை போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 26, 2026
நெல்லை: கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம்

மானூர் குப்பனாபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவருடைய மனைவி பக்கியத்தாய் (23). இவர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மதியம் 3 மணியளவில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பத்தாக தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த மானூர் போலீசார் உடலை கைப்பற்றி பாளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


