News January 3, 2026

மயிலாடுதுறை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

Similar News

News January 12, 2026

மயிலாடுதுறை: 7 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

மயிலாடுதுறை காவல் சரகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று(ஜன.11) சட்டவிரோத குட்கா பொருட்கள் விற்பனை குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் மருங்கூரை சேர்ந்த ராகுல் ஹமீது (51) என்பவர், சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து. மேலும் அவரை கைது செய்து, சுமார் 7 கி குட்கா பொருட்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

மயிலாடுதுறை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது t<>nagrisnet.tn.g<<>>ov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

மயிலாடுதுறை: வாகனம் மோதி வாலிபர் பலி

image

செம்பனார்கோயில், பரசலூரை சேர்ந்தவர் திவாகீஷ் (30), இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரசலூர் அருகே நேற்று சென்று கொண்டிருந்தபோது, மாதவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பலத்த காயமடைந்த திவாகீஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!