News May 3, 2024
+2 தேர்வு முடிவுக்கு முன்பே நீட் தேர்வு

நடப்பாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுக்கு முன்பே நீட் தேர்வு நடப்பதால், மாணவர்களின் சங்கடங்கள் தவிர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே நீட் தேர்வு நடக்க இருந்ததால் மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், நடப்பாண்டில் மே 5இல் நீட் தேர்வும், 6இல் +2 பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகிறது.
Similar News
News November 16, 2025
தோல்விக்கு வீரர்களை சாடிய கவுதம் கம்பீர்

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு திறனுடன் கூடிய மனவலிமை தேவை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன்கள் இலக்கானது எளிதில் துரத்திப் பிடிக்க கூடியதே என்று அவர் கூறியுள்ளார். சுழலுக்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளத்தில் விளையாடுவதற்கு உத்தியும், நிதானமும் தேவை எனவும், சரியாக விளையாட தவறினால் தோல்வியே ஏற்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 16, 2025
முகத்துக்கு ஐஸ் ஃபேஷியல் பண்றீங்களா?

ஐஸ் க்யூப்களை வைத்து முகத்தில் ஒத்தடம் கொடுப்பது நல்லது என கூறப்படுகிறது. எனினும் இதனை பயன்படுத்தும்போது 3 விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். ➤நேரடியாக சருமத்தில் ஐஸ்சை வைக்காமல், ஒரு துணியில் சுற்றி ஒத்தடம் கொடுப்பது நல்லது ➤சிலருக்கு ஐஸ் ஒத்தடம் ஒத்துக்காது, டாக்டரின் ஒப்புதலுடன் கொடுக்கலாம் ➤வெறும் தண்ணீர் நிறைந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாமல், கற்றாழை ஜெல்லை கலந்து பயன்படுத்தலாம். SHARE.
News November 16, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது unofficial ODI-ல் இந்தியா A 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட் செய்த SA, 30.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிஷாந்த் சிந்து 4 விக்கெட், ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆடிய இந்திய அணியில் ருதுராஜ் அரைசதம் விளாசிட, 133 ரன்கள் இலக்கு 27.5 ஓவர்களில் சேஸ் செய்யப்பட்டது.


