News May 3, 2024
5 லட்சம் பேரின் சிம் கார்டுகளை முடக்க உத்தரவு

வருமான வரி செலுத்தாத 5,06,671 பேரின் சிம் கார்டுகளை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய தவறியவர்களின் சிம் கார்டுகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, வருமான கணக்கைத் தாக்கல் செய்ய 24 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
Similar News
News November 16, 2025
BREAKING: இந்தியா அபார வெற்றி

தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான 2-வது unofficial ODI-ல் இந்தியா A 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த இப்போட்டியில், முதலில் பேட் செய்த SA, 30.3 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நிஷாந்த் சிந்து 4 விக்கெட், ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து ஆடிய இந்திய அணியில் ருதுராஜ் அரைசதம் விளாசிட, 133 ரன்கள் இலக்கு 27.5 ஓவர்களில் சேஸ் செய்யப்பட்டது.
News November 16, 2025
பிரண்டை சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா?

பிரண்டையில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு இது மருந்தாகிறது. *சர்க்கரை நோய், குடல் புண், மூல நோய் குணமாகும் *மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலிக்கு சிறந்த மருந்து *செரிமான சக்தியை அதிகரிக்கும் *ரத்த குழாய்களில் ஏற்படும் கொழுப்பை கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும் *பிரண்டையில் உள்ள வைட்டமின் சி எலும்புகளை ஒட்ட வைக்கும் சக்தி நிறைந்தது.
News November 16, 2025
சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகினார்

பாஜகவில் இருந்து <<18296121>>இடைநீக்கம்<<>> செய்யப்பட்ட Ex மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதானி நிறுவனத்துடன் பிஹார் அரசு மேற்கொண்ட மின்சார ஒப்பந்தத்தில் ₹62,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், தவறுகளை சுட்டிக் காட்டினால் கட்சிக்கு விரோதமா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


