News January 3, 2026
குமரி: 2 குழந்தைகளுடன் பெண் மாயம்

கருங்கல் அருகே திப்பிரமலை நெடுவிளையை சேர்ந்த தம்பதி ஜெறின் (41) – உஷா (32). இவர்களுக்கு ஒரு மகனும் (6), ஒரு மகளும் (5) உள்ளனர். சம்பவத்தன்று இரவு ஜெறின் அருகில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனைக்கு சென்று, பின்னர் ஜெறின் திரும்ப வந்த போது மனைவியையும், 2 குழந்தைகளையும் காணவில்லை. மனைவியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதுகுறித்து ஜெறின் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
குமரி: முதலை நடமாட்டம் குறித்து வனத்துறை விளக்கம்

திற்பரப்பு அருகே கல்லு வரம்பு பகுதியில் ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. மேலும் சமூக வலைதளங்களிலும் பாறை மீது முதலை இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலான நிலையில் அவை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது வதந்தியாக இருக்க கூடும் என தெரிவித்துள்ள வனத்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
News January 13, 2026
கன்னியாகுமரி எஸ்பி கடும் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் லாட்ஜுகள் மற்றும் ஆடம்பர வீடுகளை வாடகைக்கு எடுத்து அதில் ஸ்பா நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அனுமதியின்றி ஸ்பா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
குமரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

குமரி மக்களே உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன்<


