News January 3, 2026
திருவாரூர்: ஆட்சியர் உதவித்தொகை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு 04-08-2025க்கு பிறகு மரணத்திற்கான உதவித்தொகை ரூ.30,000; ஈமச்சடங்கிற்கு ரூ.10,000; விபத்து உயிரிழப்புக்கான நிவாரணம் ரூ.2,00,000; உடல் உறுப்பு இறப்பிற்கான உதவித்தொகை ரூ.1,00,000 வழங்கப்படவுள்ளது. இதற்கு மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதிக்குரிய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
திருவாரூர்: கழுத்தை அறுத்து மாணவர் தற்கொலை முயற்சி

திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தேவங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் (19) என்பவர் படித்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் விடுதி குளியல் அறையில் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு திருவாரூர் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து திருவாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 5, 2026
திருவாரூர்: இளைஞர் உயிரை காவு வாங்கிய தெருநாய்

நன்னிலம் அடுத்த முடிகொண்டானைச் சேர்ந்தவர் ஆகாஷ் (22). கடந்த 3 மாதங்களுக்கு முன் தெருநாய் ஒன்று இவரை கடித்துள்ளது. அவர் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் ஊசி போட்டு விட்டு, முறையான சிகிச்சை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகாஷ் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால், மருத்துவ பரிசோதனை செய்த போது ரேபிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 5, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில், இன்று (பிப்.4) இரவு 10 மணி முதல் (பிப்.5 ) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


